search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மாநில காங்கிரஸ்"

    • தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
    • சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93% வருமானம் தேர்தல் பாத்திரங்கள் வழியாக வந்தது என அண்ணாமலை கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பின் விவரங்களையும் தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி வழங்கவேண்டும். ஸ்டேட் வங்கி பகிர்ந்து கொள்ளும் தகவல்களை தேர்தல் ஆணையம் அதன் அதிகாரபூர்வ இணைய தளத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசினார். அதில், "தேர்தல் பத்திரம் திட்டத்தின் மூலம் பாஜகவுக்கு வரக்கூடிய பணம் 52 சதவீதம்தான். திமுகவுக்கு 91 சதவீதம் வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 62 சதவீதம் வருகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 93 சதவீதம் வருகிறது என புள்ளி விவரங்களோடு அவர் பேச ஆரம்பித்தார்.

    இதனை பார்த்த நெட்டிசன்கள் திரிணாமுல் காங்கிரஸ் என்பதற்கு பதிலாக தமிழ் மாநில காங்கிரஸ் என அண்ணாமலை மாற்றி கூறியதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    சில நாட்களுக்கு முன்பு கூட சபாநாயகர் என சொல்வதற்கு பதில் ஆளுநர் என அண்ணாமலை மாற்றி கூறிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.
    • நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் த.மா.கா. யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து தான் முடிவு எடுக்க வேண்டும். இதற்காக வருகிற 12-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் த.மா.கா. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். அவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிப்பார்கள். பொதுக்குழு கூட்டத்தில் த.மா.கா.வின் தேர்தல் வியூகம், யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி முடிவு அறிவிக்கப்படும்.

    கடந்த தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக் கட்சி, ஐ.ஜேகே., புரட்சி பாரதம் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி அந்தந்த கட்சியின் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு தேர்தல் வியூகங்களை அமைத்து கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிப்பார்கள்.

    இதேபோல் நாங்களும் பொதுக்குழுவில் கலந்து பேசி தாமதமில்லாமல் சரியான நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது.
    • பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆவின் பால் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி இருக்கிறது. இதனால் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயன் பெறுவார்கள்.

    ஆவின் பால் நிறுவனமும், தமிழக அரசும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அளித்துவிட்டு, அதனை ஈடுகட்ட ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக்கூடாது. ஏற்கனவே ஆவின் பால் நிறுவனம் பால் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளது. ஆகவே பால் விற்பனை விலையை மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    ஆவின் நிறுவனம் மற்ற மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்வதை கைவிட்டு, நமது மாநில பால் உற்பத்தியாளர்களிடமே பால் கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் பால் உற்பத்தியாளர்களுக்கும் பயன் கிடைக்கும், ஆவின் நிறுவனத்திற்கும் கொள்முதல் அளவும் உயர்ந்து, நுகர்வோரின் பால் தட்டுப்பாடும் விலகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மதுவில் இருந்து மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு செல்வது அபத்தமாக இருக்கிறது.
    • தமிழ் மாநில காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் வீதிக்கு வீதி மதுக்கடைகளை திறந்ததால் பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை சீரழிந்து வருகின்றனர். மதுவால் நாள்தோறும் கொலை, கொள்ளை, பெண்கள் மீதான வன்புணர்வு என்று குற்ற செயல்கள் கூடிக்கொண்டே போகின்றது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர், சென்னையில் வணிக வளாகங்களில் தானியங்கி மது விற்பனை எந்திரம் மூலம் மது விற்பனையை துவங்கிய போது, பொது மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி அது கைவிடப்பட்டது. இந்நிலையில் தற்பொழுது தமிழகத்தில் "டெட்ரா பேக்" மூலம் மது விற்பனை செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தமிழ்நாடு மதுவிலக்கு ஆயர்த்தீர்வைத்துறை அமைச்சர் கூறியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. மதுவிலக்கிற்கு என்று ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்தி அந்த அமைச்சகமே மதுவை விற்கும் அதிசயம் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது.

    ஏற்கனவே மதுவிற்பனையால் மக்கள் சீரழிந்து வரும் நிலையில் புதிதாக எல்லோரும் எளிதாக, கூச்சம் இல்லாமல் வாங்கும் வகையில், குளிர்பானம் போல் அட்டைப் பெட்டியில் அடைத்து "டெட்ரா பேக்" மூலம் மதுவிற்பனையை துவங்க இருப்பது இளைஞர்கள், மாணவர்களின் சீரழிவிற்கு பெரிதும் வழிவகுக்கும். ஒருபுறம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்போம் என்று கூறும் தமிழக அரசு மறுபுறம் புதுப்புது திட்டங்களை கொண்டு வந்து, மதுவில் இருந்து மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு செல்வது அபத்தமாக இருக்கிறது.

    பெரும்பாலும் குற்றச் செயலுக்கு அடித்தளமாக மதுவின் தாக்கமே இருக்கிறது. அதோடு ஏழை, எளிய குடும்பங்களின் வருமானம் பெரும் பகுதி மதுக்கடைகளுக்கு செல்கிறது. இதனால் லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையின் பிடியிலும், பொருளாதார சிக்கலிலும் சிக்கி தவிப்பது அரசின் கண்களுக்கு தெரியவில்லையா என்ன.

    வருமானம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு புதுப்புது வழியில் மதுவின் விற்பனையை அதிகரித்து மக்கள் மீது அக்கரை இல்லாத அரசாக செயல்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது. எக்காரணத்ததை கொண்டும் "டெட்ரா பேக்" மது விற்பனையை தமிகத்தில் கொண்டுவரக் கூடாது. மீறி கொண்டு வந்தால் அதை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மத்தியில் பா.ஜனதா, மாநிலத்தில் அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் இரு கட்சிகளின் நலம் விரும்பியாகவே இருக்கிறோம்.
    • எங்களால் பொருளாதார ரீதியாக பல கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை.

    அரசியலில் அப்பழுக்கற்றவர் என்ற முத்திரையோடு ஜி.கே.வாசன் எம்.பி. இருந்தாலும் அவரது கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தடுமாறும் காங்கிரசாகவே இருக்கிறது.

    அ.தி.மு.க.-பா.ஜனதா உறவு முறிந்ததால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கை கோர்க்கலாம் என்ற மனநிலையில் இருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மத்தியில் பா.ஜனதா, மாநிலத்தில் அ.தி.மு.க. என்ற நிலைப்பாட்டில் இரு கட்சிகளின் நலம் விரும்பியாகவே இருக்கிறோம். இப்போது கூட்டணி முறிந்தாலும் தேர்தல் நெருங்கும்போது என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது.

    எங்களால் பொருளாதார ரீதியாக பல கட்சிகளுடன் போட்டி போட முடியவில்லை என்பது உண்மை. 3-வது முறையாக வெல்வது சாதாரண விஷயமல்ல. தற்போதைய அரசியல் சூழலில் 3-வது முறையாக மோடி பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தியா கூட்டணி என்பது முரண்பாட்டின் மொத்த வடிவம்.

    அமலாக்கத்துறையை வைத்து தி.மு.க.வை மிரட்டுவதாக கூறுவது தவறு.

    வருமான வரித்துறையும் அமலாக்கத்துறையும் மத்திய அரசின் கீழ் பணியாற்றுகிற துறைகள். பா.ஜ.க.வின் கீழ் பணியாற்றுகிற துறைகள் கிடையாது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் சரி, வேறு கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சரி மக்கள் வரிப்பணத்தை ஏய்ப்பவர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது தான் இந்தத் துறைகளின் நோக்கம். தமிழக அரசு கூட சி.பி.சி.ஐ.டி. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரெய்டு நடத்துகிறார்கள். அப்படி என்றால் மத்திய அரசு செய்தால் தவறு மாநில அரசு செய்தால் சரியா?

    • சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
    • வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்கள் தற்பொழுது சம்பா, தாளடி பயிர்கள் செய்யப்பட்டுள்ளது. அவற்றில் நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் இளம் பயிர்கள் மழைநீரில் மூழ்கி உள்ளது.

    மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில், எடக்குடி, வடபாதி அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளில் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள், மின் மோட்டார் மூலமும், நேரடி நெல் விதைப்பு மூலமும் சாகுபடி செய்துள்ளனர். மேலும் சீர்காழி, குன்னம், பெரம்பூர் அதை சுற்றியுள்ள 5 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முற்றிலுமாக மழைநீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலையில் உள்ளார்கள்.

    விவசாயத்தின் மீது சிறப்பு கவனம் செலுத்தி, மழைநீரில் மூழ்கியுள்ள பயிர்களை காப்பாற்ற தமிழக அரசு போர்கால அடிப்படையில், உரிய நடவடிக்கை எடுத்து பயிர்களை காக்க வேண்டும். அதோடு தற்பொழுது வடகிழக்கு பருமழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசுக்கு கண்டனம்.
    • ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

    சென்னை:

    த.மா.கா. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை ஏற்க மறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காத கர்நாடகா அரசை கண்டித்து, வருகிற 10-ந்தேதி மாலை 3 மணியளவில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்டங்களின் சார்பாக அரியலூர் மாவட்டம், திருமானூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், டெல்டா மாவட்ட மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மாநில துணை அமைப்புத் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ், விவசாய அணியின் சார்பாக டெல்டா மாவட்ட மாநில, மாவட்ட, தலைவர்கள், நிர்வாகிகள், கலந்துகொள்கிறார்கள்.

    காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்க கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாய பெருங்குடி மக்களும், பொதுமக்களும், பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது.
    • மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையில் நதிநீர் பங்கீடு விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு, இரண்டு மாநிலங்களுக்கு இடையே சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பாக பணியாற்றி வருகிறது.

    அந்தந்த மாநில நிலவரத்திற்கு ஏற்ப கருத்து பரிமாற்றங்கள் இருக்கும். இதில் வன்முறைக்கு எந்த விதத்திலும் இடமில்லை. கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் வதந்திகளை பரப்புவது மிகவும் கண்டிக்கதக்கது. இதுபோன்ற வீண் வதந்திகளை பரப்புவர்கள் மீது கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களின் உணர்ச்சிகளை தூண்டி கலகம் ஏற்படுவதை இரு மாநில அரசுகளும் கடுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
    • பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஆண்டுதோறும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் பெருந்தலைவரின் 121-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு மாநகரில் வருகிற 15-ந்தேதி மாலை 4 மணி முதல் 9 மணி வரை நடைபெறும்.

    பொதுக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள த.மா.கா. வினர் கலந்து கொள்கிறார்கள். இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
    • சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் முதலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பணி வழங்கவும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் பணிக்கான ஒரு மறுநியமனத் தேர்வை ரத்து செய்யவும், ஆசிரியர் பணிக்கான வயது வரம்பை 40 என்பதை நீக்கவும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மாணவச்செல்வங்களின் கல்வி, வருங்கால முன்னேற்றம் அதன் மூலம் மாநில வளர்ச்சி, நாட்டின் உயர்வு ஆகியவற்றை கவனத்தில் கொண்டால் ஆசிரியர் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே தமிழக அரசு, 2013-ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுப்பணியின்றி தவிக்கும் சுமார் 60 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வகையில் நடவடிக்கை எடுத்து அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் உதவிடுமாறு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும்.
    • தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. சட்டமன்றத் தேர்தலின் போது மக்களிடம் இருந்து வாக்கு வாங்குவதற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்தவுடனேயே கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடமாக எதிர்பார்த்த மக்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காமல் காலத்தை நீடித்து வந்தது. மேலும் தற்பொழுது ஆலோசனை என்ற பெயரில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் பாகுபாடு, பாரபட்சம், கோட்பாடு என வகுத்து வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையை இழக்க வைத்திருக்கிறது.

    இந்நிலையில் தமிழக அரசு உடனடியாக தனது நிலையை, ஆலோசனை செய்ததை மாற்றிக்கொண்டு தேர்தலில் வெளியிட்ட வாக்குறுதிக்கு ஏற்ப மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும். எனவே தி.மு.க. அரசு மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாத வகையில் அனைவருக்கும் கொடுப்பது தான் நியாயமானது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.
    • அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

    சென்னை :

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கல்வித்துறையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். நீண்டகாலமாக ஆர்ப்பாட்டம், போராட்டத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை அரசிற்கு தெரிவித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் கணினி, ஓவியம், உடற்கல்வி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன் போன்ற பாடங்களை நடத்தும் ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 10 ஆயிரம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் கல்வித்துறை, பகுதிநேர ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கு மே மாதம் சம்பளம் அளிக்கப்படுவதில்லை. ஆகவே பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான, பணி நிரந்தரம், சம்பள உயர்வு, பணியின் போது இறந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 3 லட்சம் நிதியுதவி, அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் போன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×